தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழந்த அடுத்த நொடியே மழை பெய்யத் தொடங்கியது.
இதனையடுத்து உலகக்கிண்ணத் தொடரோடு விடைபெறும் சங்கக்காரவுக்கு அந்த வருண பகவானே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததாக ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
லீக் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடிய சங்கக்கார, தொடர்ந்து 4 சதங்களையும் விளாசி சாதனை படைத்ததோடு, அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார்.
இந்நிலையில், இன்று தென்னாபிரிக்க அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் சங்கக்கார 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் தொடர்ந்து 5வது முறையாக சதம் அடிக்கும் வாய்ப்பை தவறிவிட்டார். நல்ல நிலையில் இருந்த சங்ககார, மற்ற வீரர்களின் சொதப்பலால், வேறு வழியில்லாமல், அடித்து ஆடத் தொடங்கி ஆட்டமிழந்தார்.
சங்கக்கார ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்ததும், திடீரென மழை கொட்டத் தொடங்கியது. இந்த மழை சங்கக்காரா ரசிகர்களை வேறு மாதிரி சிந்திக்க வைத்துள்ளது.
சங்ககார உலகத்தரம்வாய்ந்த வீரர் மட்டுமின்றி, மனித நேயம் உள்ளவராகும். எனவே, அவர் ஆட்டமிழக்கும் போது, வருண பகவானே மழை தூவி வாழ்த்து தெரிவித்துவிட்டார் என்று ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.