சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரல் 7ம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும்!!

475

ol

2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத ஆரம்பத்தில் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஏப்ரல் மாதம் 07ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 09ம் திகதி முதல் 18ம் திகதி வரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.