இந்திய உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடியை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கிய வீடியோ ஒன்று வட்ஸ் அப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மேற்கு பகுதியில் உள்ள ஹத்ராஸ் என்னும் நகரில் ஒரு இளம்பெண்ணும் அவரது நண்பரும் பைக்கில் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அவர்களை பைக்கில் துரத்திய 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இருவரையும் சுற்றி வளைத்து புறநகர் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு வைத்து அவர்களை தாக்கியதோடு அதனை வீடியோவாக எடுத்து வட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், அந்த பெண்ணையும் வாலிபரையும் தடியால் தாக்கும்போது, அந்த பெண் அவர்களை அண்ணா என அழைப்பதோடு,தங்களை விட்டுவிடும்படி மன்றாடுகிறார்.
மேலும் அந்த பெண், அந்த பையனை தனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்றும் அவன் தனது பள்ளி தோழன் என்றும் கூறுகிறார்.
அந்த இளம் பெண்ணிடம் இந்த விஷயத்தை குடும்பத்தாரிடம் கூறக்கூடாது என அந்த கும்பல் மிரட்டி வீடியோ எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த வீடியோவை வட்ஸ் அப்பில் பார்த்த இளம் பெண்ணின் உறவினர் ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், நானும் அந்த வாலிபனும் தவறாக நடந்து கொண்டதாக கூறி இருவரையும் அவர்கள் அடித்தார்கள்.
மேலும், நான் அவர்களிடம் எங்களை விட்டு விடும்படி கெஞ்சிய போதும் அவர்கள் எங்களை அடித்து துன்புறுத்தினார்கள் என்று தெரிவித்துள்ளார்.