உலகக்கிண்ண காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேச அணியுடன் மோதியது
இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணி சார்பாக ரோகித் ஷர்மா சதம் 137 ஓட்டங்களையும், சுரேஷ் ரைனா 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். டஸ்கின் அஹமட் 3 விக்கடுகளைப் கைப்பற்றினார்.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்தது. இதனையடுத்து வங்கதேச அணி 303 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கியது.
வதொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 193 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆரம்பம் முதல் இந்திய பந்துவீச்சில் வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கட்டுகளை பறிகொடுத்து. 45 ஓவர்களில் வங்கதேச அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதனால் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.