வவுனியா கல்வாரி பாதயாத்திரிகர்களுக்கு வவுனியா பிரதேசசெயலகம் வரவேற்பு!!(படங்கள்)

738

தவக்காலத்தை முன்னிட்டு மன்னாரில் இருந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலம் நோக்கி சென்ற பாத யாத்திரிகர்களை இன்று (19.03) வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.

நேற்று மன்னார் புனித செபஸ்ரியார் ஆலையத்தில் குரு முதல்வர் அருட்திரு விக்ரர்சோசை தலைமையில் ஆரம்பமான இந்த தவக்கால பாத யாத்திரை இன்று வவுனியாவை வந்தடைந்து.

வவுனியா புனித அந்தோனியார் ஆலையத்தில் ஈடுபட்டு நாளை கல்வாரி திருதலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் முடிவடையும்.
இப்பாதயாத்திரையில் சுமார் 2000 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

12 34 7586