வவுனியா இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நாளை 21.03.2015 சனிக்கிழமை காலை 08.30 மணிமுதல் 12.30 மணிவரை வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இரத்ததானம் செய்ய விரும்பிய கொடையாளர்கள் நாளைய தினம் (21.03.2015) இரத்ததான முகாமில் கலந்து கொள்ளமுடியும். தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அண்மையில் யாழ் மாவட்டத்திலும் இரத்த தான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இரத்ததானம் செய்ய விரும்பியவர்கள் ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள – 076 664 4059, 077 453 9678 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.