சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இன்று (20.03.2015)வெள்ளிக்கிழமை கொடிஏறியது .
இன்று மதியம் 12.20மணியளவில் மகோற்சவ குரு சிவாகம திலகம் சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் (ஒட்டுசுட்டான் தான்தோன்றிஈஸ்வரர் ஆலயம் ) கொடியேற்றி மகோற்சவத்தை ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து கொடிதம்ப பூஜை இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மற்றும் வினாயகபெருமான் ஆகியோர் ரிஷப வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தனர் .
மீண்டும் மாலை நாலரை மணிக்கு விநாயகர் யாகம் இடம்பெற்று மூலஸ்தான பூஜை கொடிதம்ப பூஜை என்பன இடம்பெற்று மாலை ஆறரை மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் மற்றும் வினாயகபெருமான் ஆகியோர் ரிசப வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. மேற்படி நிகழ்வுகள் யாவும் வவுனியா நெற் இணையதளத்தின் ஊடக அனுசரணையுடன் இடம்பெறுகிறது. தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள் ….
படங்கள் :கஜன்