விபூசிகாவுக்கு தாயாருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுப்பு!!

465

vipoosika-Mother

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட ப.ஜெயக்­கு­மா­ரியின் மக­ளான விபூ­சி­காவை தாயா­ருடன் செல்­வ­தற்கு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் அனு­மதி மறுத்­துள்­ளது.

தமி­ழீழ விடு­தலைப் புலி­களை மீளக் கட்டியெழுப்­பு­வ­தற்கு முயற்­சித்­தார் என்ற குற்றச்­சாட்டில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட ஜெயக்­கு­மாரி பிணையில் விடு­விக்­கப்­பட்ட போதும் அவ­ரது மக­ளான விபு­சிகா நீதி­மன்ற உத்­த­ர­விற்கு அமைய கிளி­நொச்­சியில் இயங்கி வரும் மகாதேவா சைவச்­சி­றுவர் இல்­லத்தில் தங்கவைக்­கப்­பட்­டி­ருந்தார்.

விபு­சி­காவை சிறுவர் இல்­லத்தில் இருந்து பொறுப்­பேற்­ப­தற்கு அவ­ரது தாயான ஜெயக்குமாரி கண்­டா­வளை பிர­தேச சிறுவர் நன்­ன­டத்தை அதி­காரி ஊடாக விண்ணப்பித்திருந்தார்.

இந்­நி­லையில் இம்­மனு மீதான விசா­ரணை நேற்­றைய தினம் கிளி­நொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னி­லையில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.
இதன்­போது கண்­டா­வளை பிர­தேச சிறுவர் நன்ன­டத்தை அதி­கா­ரி­யுடன் விபு­சிகா மற்றும் அவ­ரது தாயார் ஆகியோர் ஆஜராகி இருந்தார்.

ஜெயக்­கு­மாரி சார்­பாக ஆஜ­ரான சட்டத்தரணிகளான திரு­மதி.எஸ்.விஜ­ய­ராணி, ம.கிறே­சியன், சுந்­த­ரே­ச­சர்மா, துசி­யந்தி, றைகான், ஆகியோர் ஆய­ராகி குறித்த சிறுமியை பெற்­றோ­ருடன் செல்­வ­தற்கு நீதிமன்றம் அனு­ம­திக்க வேண்டும் என கோரியி­ருந்­தனர்.

அதன்­போது ஜெயக்­கு­மா­ரியும் அவ­ரது மக­ளான விபு­சி­காவும் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என பயங்கரவாத புல­னாய்­வுப்­பி­ரி­வி­னரால் சுட்டிக்காட்­டப்­பட்­டது. அத்­துடன் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளதாலேயே குறித்த சிறுமி சிறுவர் இல்­லத்தில் தங்க வைக்­கப்­பட்­ட­தா­கவும் கூறப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து விபு­சிகா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே தயாரிடம் இணைவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும் என நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் குறிப்பிட்டதுடன் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.