சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அகிலாண்டேஸ்வரம் திருத்தலத்தின் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரருக்கு மகோற்சவம் ஆரம்பமாகி நேற்று (21.03.2015) இரண்டாம் நாள் திருவிழா இடம்பெற்றது .
நேற்று காலை பத்து மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் விநாயக பெருமான் மூஷிக வாகனத்திலும் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தனர்.
மீண்டும் மாலை நான்கரை மணியளவில் விநாயகர் யாகம் ஆரம்பமாகி ஐந்து மணிக்கு மூலஸ்தான பூஜை ஐந்தரை மணிக்கு கொடிதம்ப பூஜை தொடர்ந்து இரவு ஆறரை மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் விநாயக பெருமான் மூஷிக வாகனத்திலும் உள்வீதி வெளி வீதி எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. திருவிழா தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள்.