கொலை முயற்சி வழக்கு – கைதாவாரா விஜயகாந்த்??

411

vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் பரபரப்பு காணப்படுகிறது.

அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 1ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக வழக்கறிஞர்களுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் விஜயகாந்த் உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் ரிஷிவந்தியம் பயணத்தை பாதியில் நிறுத்தி விட்டு கிளம்பிப் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.