வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம் நாளான நேற்று 22-03 -2015 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ.ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.
மீண்டும் மாலை கற்பகதரு காட்சிக்குரிய அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கற்பகதருக்காட்சி கொண்டு காமதேனு வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெற்றது.