சிலிர்ப்பூட்டும் அரையிறுதிப் போட்டி : இறுதிவரை போராடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து : கண்ணீரால் அரங்கத்தையே அழவைத்த தென்னாபிரிக்க வீரர்கள்!!

395

ஒக்லண்டில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 38 ஓவர்கள் நிறைவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதனை அடுத்து போட்டி 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக டுப்லசிஸ் 82 ஓட்டங்களையும் டி வில்லிர்ஸ் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் டக்வத் லுவிஸ் அடிப்படையில் 298 ஓட்டங்களை பெற்றால் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி மட்டுப்படுத்தப்பட்ட 42.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக பிரண்டன் மக்கலம் 59 ஓட்டங்களையும் எலியட் ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களையும் அன்டர்சன் 58 ஓட்டங்களையும் பெற்றனர். நியூசிலாந்து அணி சார்பாக மோர்கல் 3 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.

இதனால் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி உலக கிண்ண வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டி ஒன்றில் எதிர்வரும் 29ஆம் திகதி களமிறங்கவுள்ளது.

கிரிக்கெற்றின் அதிஷ்ரமில்லாத அணி எனக் கருதப்படும் தென்னாபிரிக்க அணி வீரர்கள் தோல்வியால் மைதானத்தில் தேம்பித் தேம்பி அழுதமை தென்னாபிரிக்க ரசிகர்களை மட்டுமன்றி நியூசிலாந்து ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது.

S S1 S3 S4