வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம் நாளான நேற்று 23-03 -2015 திங்கட்கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் இடப வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.
நேற்று மாலை எல்லாம் வல்ல எம் பெருமான் ஈரேழு உலகங்களையும் ஆட்சி புரிகின்ற கயிலை நாதன் வடிவில் கயிலாயத்தில் அருள்புரிகின்ற கயிலை காட்சிக்குரிய அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கயிலைத் திருக்காட்சி கொண்டு இடப வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்று இன்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.