ரணில் நாளை வடக்கு விஜயம்!!

986

Ranil

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வடக்­கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜ­யத்தின் போது யாழ்ப்­பாணம், கிளிநொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பிர­தமர் செல்­ல­வுள்ளார். அத்­துடன் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்­களில் யாழ்ப்­பா­ணத்தில் பல நிகழ்­வு­களில் கலந்து கொள்­ள­வுள்­ள­துடன், முக்­கிய பல பிர­மு­கர்­க­ளையும் சந்திக்கவுள்ளார்.

ஞாயிறு தினத்­தன்று கிளி­நொச்­சியில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்பினர்­களை சந்­திக்­க­வுள்­ள­து­டன, முல்லைத்­தீ­விற்கும் பிர­தமர் விஜயம் செய்யவுள்ளார்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பிறகு ஜனாதிபதி மைத்­தி­ரி­பா­ரல சிறி­சேன, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமாரதுங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய மூவரும் கடந்த திங்­கட்­கி­ழமை வடக்கிற்­கான விஜ­யத்தை மேற்­கொண்டனர்.

இந்­நி­லையில் பிர­தமர் மாத்­திரம் நாளை வடக்கிற்கு விஜயம் செய்­ய­வுள்­ளமை விஷேட அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கி­றது. இதன்­படி வௌ்ளிக்­கி­ழ­மை­யான நாளை யாழ்ப்பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்ள பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நல்லுர் கோயில் , நாவலர் ஜூம்மா மஸ்ஜித், மற்றும் ஆதினம் தேவஸ்­தானம் ஆகிய வணக்­கஸ்­த­ளங்­க­ளுக்கு சென்று வழி­பா­டு­களில் ஈடுப்படவுள்ளார்.

மேலும் யாழ் .மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம், தென் இந்­திய அருட்­தந்தை டெனியல் தியா­க­ராஜா ஆகிய மதத்தலைவர்களின் ஆசி­யையும் பெற­வுள்ளார்.

இந்த விஜ­யத்தின் போது மீள்­கு­டி­யேற்ற வேலைத்­திட்டம் மற்றும் புனர்­வாழ்வு பெற்ற இளை­ஞர்கள் தொடர்­பி­லான கலந்துரையாடிலும் பிர­தமர் பங்குகொள்ளவுள்ளார். மேலும் பெண்­களின்  பிரதி­நி­தி­க­ளையும் சந்­திக்­க­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் வேலைத்­திட்­டத்­திலும் கலந்து கொள்­ள­வுள்ளார்.

அத்­தோடு மீன­வர்­க­ளையும் சந்­தித்து பேசவுள்ளார். இதன் பின்னர் பருத்­தி­து­றை­யி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யாக கரு­தப்­படும் ஹார்ட்லி கல்­லுரி நிக­ழ­வொன்­றிலும் கலந்து கொள்­ள­வுள்ளார்.

இதே­வேளை சனிக்­கி­ழமை யாழ் மாவட்ட தேசிய பாட­சாலை அதி­பர்­களை சந்­தித்து தற்­போது மாவட்ட பாட­சா­லையில் காணப்­படும் பிரச்­சினை குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்க வடக்கு விஜ­யத்­தின்­போது நெடுந்­தீ­விற்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

அத்­தோடு இந்த விஜ­யத்தின் போது பலாலி படைத்­த­லை­மை­ய­கத்­திற்கு சென்று பொலிஸ், விமா­னப்­படை உள்­ளிட்ட முப்­படை அதி­கா­ரி­க­ளுடன் விஷேட பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். மேலும் பலாலி பாது­காப்பு தளத்­தையும் பார்­வை­யி­ட­வுள்ளார்.

இதனை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ,கிளி நொச்­சிக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.
ஞாயிற்று கிழமை காலை 9.30 மணி­ய­ளவில் கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் வைத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­திக்­க­வுள்ளார். இதன்­போது அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.

பிர­தமர் ரணில் வி்க்கிர­ம­சிங்­கவின் மூன்று நாள் விஜ­யத்தில் இறுதியாக முல்லைதீவிற்கு சென்று அங்குள்ள பொது மக்களை சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளுக்கு மத்தியிலேயே இந்த விஜயத்தினை பிரதமர் முன்னெடுக்கவுள்ளமை விஷேட அம்சமாகவே கருதப்படுகிறது.