நைஜீரியாவில் போராளிகளிடமிருந்து மீளக் கைப்பற்றப்பட்ட நகரொன்றிலிருந்து 11 வயது மற்றும் அதற்கு கீழ்ப்பட்ட வயதுடைய சுமார் 500 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போகோ ஹராம் போராளிகளிடமிருந்து இந்த மாத ஆரம்பத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட டமாஸக் நகரிலிருந்தே மேற்படி சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
போராளிகள் அந்த நகரை விட்டு வெளியேறிச் செல்லும் போது தம்முடன் சிறுவர்களையும் அழைத்துச் சென்றுள்ளனர்.