எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலவச WiFi திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் ஊடக நிறுவன பிரதானிகளை இன்று வியாழக்கிமை சந்தித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்