வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேரந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கனகராயன்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.