சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடும் படையணியில் 800 பெண்கள்!!

524

Criya

சிரிய இரா­ணு­வத்தில் பெண்கள் பங்­கேற்­பது என்­பது நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் அறியப்­ப­டாத விட­ய­மாக இருந்­தது. ஆனால் தற்­போது பெண்கள் இரா­ணு­வத்தில் அங்கம் வகிப்­ப­தோ­டல்­லாமல் அவர்கள் முன்ன­ரங்­கு­களில் பீரங்­கி­க­ளையும் ஏவுகணைக­ளையும் செயற்­ப­டுத்­து­வ­திலும் ஈடுபட்டுள்­ளனர்.

இந்­நி­லையில் சிரிய டமஸ்கஸ் நகரின் புற­நகர் பகு­தி­களை கிளர்ச்­சி­யா­ளர்­களின் தாக்குதல்களிலிருந்து பாது­காக்கும் முக­மாக பீரங்கிப் படை­ய­ணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள பெண் படை­வீ­ரர்­களை காண்­பிக்கும் புகைப்­படங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

ஜொபார் பிராந்­தி­யத்தில் மேற்­படி பெண்கள் படை­ய­ணியை சேர்ந்­த­வர்கள் கிளர்ச்சியாளர்களுடன் மோதலில் ஈடு­பட்ட போதே இந்தப் புகைப்­ப­டங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பெண்கள் சிரிய இரா­ணு­வத்தில் இணைந்து கொள்­வ­தற்கு 2013ம் ஆண்­டி­லேயே முதல் முதலாக அனு­மதி வழங்­கப்­பட்­டது.

‘பெண் சிங்க பாது­காப்பு படை­யணி’ என செல்லப் பெயரால் அழைக்கப்படும் இந்த பெண்கள் படையணியில் தற்போது 800 பெண்கள் வரை அங்கம் வகிக்கின்றனர்.