உலகக்கிண்ண இறுதிப்போட்டியோடு விடைபெறுகிறார் மைக்கல் கிளார்க்!!

686

Clerk

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் உலக கிண்ண இறுதி போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது மைக்கல் கிளார்க்கின் காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் முதுகு வலியுடன் நீண்டநாள் விளையாடி வருகிறார்.

இதனால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய அவர் அதன் பிறகு முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கவில்லை. ஆகவே, உலகக்கிண்ண அணியில் இடம்பெறுவாரா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், அவர் உடல்தகுதியை நிரூபித்ததால் அணியில் சேர்க்கப்பட்டார்.

நீண்ட நாட்களாக அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் கிளார்க் நாளை நடைபெறும் இறுதி போட்டி பற்றி செய்தியாளர்களிடம் கருத்து வௌியிட்ட போது இந்த ஓய்வு அறிவிப்பை தெரிவித்தார்.

இதனால் நாளைய போட்டி அவருக்கு உணர்ச்சிகரமான போட்டியாக இருக்கப்போகிறது. அவுஸ்திரேலியாவிற்கு உலகக்கிண்ணத்தை பெற்று தந்த சந்தோசத்துடன் ஓய்வு பெறுவாரா என்பது நாளை தெரியும்.