ஹற்றனில் 5000 ரூபாய் போலி நாணய தாளைப் பயன்படுத்தி தயிர் கொள்வனவில் ஈடுப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரினால் கைது.
ஹற்றன், டிக்கோயா பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்று தயிர் விற்பனையாளரிடம் இருந்து தயிரை பெற்று 5000 ரூபா போலி நாணய தாள்களை வழங்கியுள்ளார். அதேவேளை விற்பனையாளரும் 5000 ரூபாவிற்கு மீதிப்பணத்தை வழங்கியுள்ளார்.
எனினும் தயிர் விற்பனையாளர் குறித்த பணம் போலியானது என கண்டறிந்து கொண்டு, சந்தேக நபரை பிடிக்க முயற்சி செய்த வேளை, அவர் தப்பியோடியுள்ளார்.
அதேவேளை நகரத்தில் உள்ள பொது மக்களின் முயற்சியினால் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஹற்றன் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர் ஹற்றன் நகரில் உள்ள நகை பட்டறை ஒன்றில் பணி புரிகின்றவா் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் வீட்டையும், பணிபுரியும் நகை பட்டறையையும் ஹற்றன் பொலிஸார் சோதனையிட்டுள்ளதுடன், இன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள்.