ஐக்கிய தேசியக்கட்சிக்கு அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (28.03) வவுனியாவில் இடம்பெற்றது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியில் பலரும் தம்மை அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டிருந்தனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான கருணாதாச, இ. சஜீந்திரா, எஸ். துரை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.