நாளைய போட்டியில் புதிய சாதனை படைக்கப் போகும் இலங்கையின் குமார் தர்மசேன!!

514

Kumar

உலககிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் தர்மசேனா, இங்கிலாந்தின் கெட்டில்பரோ நடுவர்களாக செயல்படவுள்ளனர்.

மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது நடுவர்களாக எராஸ்மஸ் (தென்னாபிரிக்கா), இயன் கோல்டு (இங்கிலாந்து) இருப்பர். அதே போல் போட்டி நடுவராக ரஞ்சன் மடுகல்ல (இலங்கை) செயல்படுகிறார்.

இதில் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியும் நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை இலங்கை நடுவர் குமார் தர்மசேன ஏற்படுத்தப் போகிறார்.

தர்மசேன, கடந்த 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணியில் இடம் பெற்றவர். அந்த வகையில் இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர் உலகக்கிண்ண இறுதி ஆட்டத்துக்கு நடுவராக பணியாற்றுவது இதுவே முதல்முறை.

கொழும்பில் பிறந்த தர்மசேனா கடந்த 2010ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக நடுவராக பணியாற்றத் தொடங்கினார்.

சகலதுறை வீரரான இவர் இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும் 141 ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.