இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு..

711

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு சாதாரணமாகவே இரத்தக் கண்ணீர் வருகிறது. ஹீமோலக்ரியா என்ற நோயினா பாதிக்கப்பட்ட 20 வயதாக ஒலிவியா என்ற பெண்ணுக்கே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்தில் கண்ணில் இரத்தம் வடிய ஆரம்பித்துள்ளது. இவரை பரிசோதித்த் வைத்தியர்கள் கண் வலியை குறைக்க சில மருந்துகளை கொடுத்துள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்தும் ஒலிவியாவின் கண்ணில் ஒவ்வொரு நாளும் சில தடவைகள் இரத்தம் வடிந்துகொண்டே இருந்துள்ளது. இதனால் வசதி குறைந்த ஒலிவியாவின் குடும்பத்தினர் ஏனையோரிடமிருந்து பெற்ற நன்கொடை பணத்தினைக் கொண்டு கண் வைத்திய நிபுணரை நாடியுள்ளனர்.

இதனையடுத்து இரத்தக் கசிவுக்கான காரணத்தை கண்டுபிடித்து ஒலிவியாவுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித் வருகின்றனர். ஆனாலும் இரத்தக் கண்ணீர் ஏற்படுவதற்கான முறையான அறிகுறிகளை வைத்தியர்கள் தெரிவிக்கவில்லை.

ஹீமோலக்ரியா எனும் பாதிப்பு மிக அரிதாகவே மனிதர்களில் ஏற்படுவதுண்டு. இதேபோன்றதொரு பாதிப்பு 2009ஆம் ஆண்டில் சிறுவன் ஒருவருக்கு ஏற்பட்டிருந்தது. அச்சிறுவனுக்கு ஒரு நாளில் மூன்று முறை இரத்தக் கண்ணீர் வந்துள்ளது.