வகுப்­புக்கு மகனை அனுப்ப தாய் எடுத்த யுக்தி உயிரை பறித்­த பரி­தா­பம்!!

502

Fire

ரியூசன் வகுப்­புக்கு செல்ல மறுத்த மகனை மிரட்டும் வகை யில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தான் தீக்­கு­ளிக்க போவ­தாக எச்­ச­ரித்த தாயொ­ருவர் தற்­செ­ய­லாக சமை­ய­ல­றைக்கு சென்ற வேளை அவர் மீது தீப்­பற்றிக் கொண்­டதில் அவர் தீ யில் கருகி பரிதா­ப­க­ர­மாக பலி­யானார்.

இந்தப் பரி­தாப சம்­பவம் யாழ்.சுன்­னாகம் சூராவத்­தையில் இடம்­பெற்­றுள்­ளது. அண்மையில் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் மரண­மா­னவர் ந.சிவ­சோதி என்ற தாயாவார். இவ­ரது மரண விசா­ர­ணையை யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை திடீர் மரண விசா­ரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.