ரியூசன் வகுப்புக்கு செல்ல மறுத்த மகனை மிரட்டும் வகை யில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தான் தீக்குளிக்க போவதாக எச்சரித்த தாயொருவர் தற்செயலாக சமையலறைக்கு சென்ற வேளை அவர் மீது தீப்பற்றிக் கொண்டதில் அவர் தீ யில் கருகி பரிதாபகரமாக பலியானார்.
இந்தப் பரிதாப சம்பவம் யாழ்.சுன்னாகம் சூராவத்தையில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மரணமானவர் ந.சிவசோதி என்ற தாயாவார். இவரது மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.