பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 250ஆக அதிகரிக்க யோசனை!!

720

Parliment

பாரா­ளு­மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225இலிருந்து 250 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டுமெ­ன்ற பரிந்துரையுடன் தேர்தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய புதிய தேர்தல் முறைக்கான யோசனையை இன்று அர­சியல் கட்சித் தலை­வர்­க­ளிடம் முன்வைக்கவுள்ளார்.

இப்­பு­திய தேர்தல் முறையின்படி 140 உறுப்பினர்கள் தொகுதி வாரி­யா­கவும் 80 உறுப்பினர்கள் மாவட்ட விகி­தா­சார முறையிலும் 30 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள்.

இதன் அடிப் படையிலேயே தேர்தல்கள் ஆணை­யாளர் கட்சித் தலை­வர்­க­ளிடம் முன்வைக்­க­வுள்ள புதிய தேர்தல் முறை யோசனை அமைந்துள்ளது.

இதேவேளை, பிர­தமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலை­மையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்தப் புதிய தேர்தல் முறை ஆராயப்­ப­ட­வுள்­ளது. தேர்தல் ஆணையாளர் முன்­வைத்­துள்ள இந்­தப்­பு­திய தேர்தல் முறை­யின்­படி 140 தேர்தல் தொகு­தி­களின் எல்லை நிர்ணய செயற்பாடுகள் கட்­சித்­த­லை­வர்­களின் அங்­கீ­காரம் கிடைத்­ததன் பின்பே நடைபெற­வுள்­ள­தாக தேர்தல் திணைக்­களம் தெரி­விக்­கி­றது.

இன்று இந்த புதிய தேர்தல் முறை பற்றி ஆரா­ய­வுள்ள அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் மீண்டும் ஏப்ரல் 6 ஆம் திகதி ஒன்று கூடி இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்­பு­திய தேர்தல் முறைமை பற்றி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முண்­ண­னியின் பாரா­ளு­மன்ற குழுவும் இன்று கூடி ஆரா­ய­வுள்­ளது. ஐ.ம.சு. முன்­னணி இது பற்றி ஆராய்ந்த பின்பு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்சியின் பாரா­ளு­மன்றக் குழுவின் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்ற பின்பே இறு­தித்­தீர்­மா­னத்தை எடுக்கவுள்ளது.