தும்பிக்கையுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை : விநாயகரின் மறுபிறவி என படையெடுக்கும் மக்கள்!!

1035

Baby

உத்தரப்பிரதேசத்தில் தும்பிக்கை போன்ற உடலமைப்புடன் பிறந்த பெண் குழந்தையை, விநாயகரின் மறுபிறவி என்று எண்ணி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரின் அருகே உள்ள கிராமத்த்தில் கடந்த வியாழக் கிழமையன்று பெண் ஒருவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், அந்த பெண் குழந்தையின் இரு கண்களுக்கு இடையில் மூக்குக்கு மேலே தும்பிக்கை போன்றதொரு பாகமும் இணைந்துள்ளதால், இந்த பெண் குழந்தை விநாயகரின் மறுபிறவி என்று அக்கம் பக்கத்தில் செய்தி பரவியுள்ளது.

இதையடுத்து அந்த குழந்தையை பார்க்க செல்லும் பொது மக்கள் காணிக்கையும் செலுத்துகின்றனர்.

மேலும், மருத்துவர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், இது ஒரு உபரி சதை வளர்ச்சி என்றும் பெற்றோர் விரும்பினால் குழந்தை வளர்ந்த பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றிவிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.