அடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் : அணிகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு!!

396

WC

2019ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச சிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிகள் 2019ம் ஆண்டு மே 30ம் திகதி முதல் யூலை 15ம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும். 8 அணிகள் நேரடியாகவும், 2 அணிகள் தகுதி சுற்று மூலமாகவும் தெரிவாகும்.

போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் அணிகளின் எண்ணிக்கையை 14ல் இருந்து 10 ஆக குறைக்க எடுத்த முடிவு சரியானதே என்று சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது.