ஐ.சி.சி. யின் உலக அணி அறிவிப்பு : சங்கக்காரவுக்கு இடம் : இந்திய அணி வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை!!

373

ICC

2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் கனவு அணியை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ள அதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்கக்காரவும் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்து அணியின் தலைவர் பிரண்டன் மக்கலம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 44 நாட்களாக இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை மூலைக்கல்லாக நின்று வழிநடத்திய மக்கலம் 4 அரைச்சதங்களை பெற்றதுடன் 328 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஐ.சி.சி. யின் கனவு அணியில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஐவரும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மூவரும் தென்னாபிரிக்க வீரர்கள் இருவரும் இலங்கை வீரர் ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 433 ஓட்டங்களை குவித்த சிம்பாப்வே அணியின் பிரண்டன் டெய்லர் 12 ஆவது வீரராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் உலகக் கிண்ண அணி வீரர்களின் பெயர்கள் வருமாறு,

பிரண்டன் மக்கலம் ( நியூசிலாந்து, அணித் தலைவர்)

மார்டின் குப்தில் (நியூசிலாந்து)

குமார் சங்கக்கார ( இலங்கை, விக்கெட் காப்பாளர்)

ஸ்டீபன் ஸ்மித் ( அவுஸ்திரேலியா )

ஏ பி டி வில்லியர்ஸ் ( தென்னாபிரிக்கா)

கிளன் மெக்ஸ்வெல் ( அவுஸ்திரேலியா)

கோரி அண்டர்சன் (நியூசிலாந்து)

டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து)

மிச்செல் ஸ்ரார்க் ( அவுஸ்திரேலியா)

டிரென்ட் போல்ட் ( நியூசிலாந்து)

மோர்னே மோர்கல் ( தென்னாபிரிக்கா)

12 ஆவது வீரர் பிரண்டன் டெய்லர் ( சிம்பாப்வே )