யாழ். பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்புப் பகிஷ்கரிப்பு!!(படங்கள்)

951

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று (31.03) செவ்வாய்க்கிழமை மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நுண்கலைப்பீட துறைத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதிலும் மாணவர்களின் கோரிக்கைளுக்கு உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததையடுத்தே மீண்டும் நுண்கலைப் பீட இறுதியாண்டு மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள், இறுதியாண்டு மாணவர்களுக்கான செயற்திட்டத்திற்கு பொறுப்பான ஆசிரியரை நியமிக்க வேண்டும், 2ம் தவணையை ஆரம்பிக்க வேண்டும் போன்ற மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அவர்களது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் போது மீண்டும் கடந்த 17ஆம் திகதியும் வகுப்புப் பகிஷ்கரிப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1234