வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 01.042015 புதன்கிழமையன்று சப்பர திருவிழா இடம் பெற்றது.
நேற்று முன்தினம் பிரதோஷ அபிசேகங்கள் நிறைவடைந்த பின் மாலை ஐந்து மணியளவில் யாக பூசையும் ஐந்தரை மணிக்கு தம்ப பூசையும் அதனை தொடர்ந்து வீராசாமியின் புதல்வர்கள் கண்ணன் கரன் மற்றும் அவர்களது குழுவினரின் சிறப்பு தவில் நாதஸ்வர கச்சேரி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அருளகம் சிறுவர்களது சிறப்பு வயலின் கச்சேரி கச்சேரி இடம்பெற்றது.
வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ஒன்பது மணியளவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலியோர் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதுவும் வவுனியாவில் மிக உயர்ந்த வானுயர்ந்த சப்பரத்தில் திரு வீதி உலா வந்தனர்.