முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப்பிரிவும், புதிய இரத்த வங்கியும் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் சுகாதார அமைச்சர் டாக்டர் றாஜித சேனாரத்ன, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட் இப் பிரிவானது ஓர் வரப்பிரசாதமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.