டோகா கட்டாரில் மானி,நேரியல் குழந்தை செல்வங்களின் அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பால் இரத்தினபுரி கலெல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய தாய் ,தந்தை ஒரு சிலர் இருவரையும் இழந்த 50 மாணவர்களுக்கு ஆசிரியர் திரு.ஐங்கரன் அவர்கள் தமிழ் விருட்சத்திடம் அவர்களின் நிலையை தெரியப்படுத்தி கற்றல் உபகரணங்கள் தந்து உதவும் படி கேட்டு கொண்டதுக்கினங்க 01.04.2015 அன்று இரத்தினபுரி கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது .
அதிபர் திருமதி ந.ஜீவரத்தினம் அவர்களின் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில்
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், தமிழ் விருட்சத்தின் யாழ் இணைப்பாளர் நிதர்சன், ஆசிரியர்கள் ஐங்கரன், கலாதர்சன், செல்வமணி, வசந்தகுமாரி, சசிகலா, பிரதீபா உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.