கண்டி – அலிமூடுக்குவ பகுதியிலுள்ள தொலைபேசி கடையொன்றில் நபரொருவர் கையடக்கதொலைபேசி ஒன்றை கொள்ளையிட்டு தனது பைக்குள் வைப்பது அங்கிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் கடந்த 24.03.2015 அன்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையடக்க தொலைபேசி வாங்க வந்த நபர் ஒருவர், 29,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை வாங்கியதன் பின் அவ்விடத்திலிருந்த 30,000 ரூபா பெறுமதியான மற்றொரு கைபேசியை யாருக்கும் தெரியாமல் திருடி தனது பைக்குள் வைத்துள்ளார்.
தொலைபேசியை திருடிய காட்சிகள் குறித்த கடையில் இருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த சந்தேகநபரை யாருக்காவது தெரியுமானால் உடனடியாக கண்டி பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.