கென்யா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
கென்யாவின் கரிசா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நேற்று நுழைந்த அல்ஷபாப் அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 70 மாணவர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது 150 மாணவர்கள் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சில மாணவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாய் பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.