வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனிஉத்தர தீமிதிப்பு நிகழ்வு!(படங்கள், வீடியோ)

419

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று 03.04.2015 வெள்ளிகிழமை மாலை 5.00மணியளவில் இடம்பெற்றது.

காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட பவனியாக கோரவபோத்தான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தனர். பிற்பகல் அபிசேகம் வீதி உலா என்பன இடம்பெற்று மாலை ஐந்து மணியளவில் தீமிதிப்பு உற்சவம் இடம் பெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிக்கும் உற்சவத்தில் பங்கு பற்றியிருந்தனர்.

 அம்பாள் வசந்த மண்டப பூஜையின் பின் உள்வீதி வெளிவீதி சிம்ம வாகனத்தில் வலம்வந்து  ஆலயத்துக்கு முன்புறம் தீமிதிப்புக்ககாக தயார் செய்யபட்ட பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி  வழங்க தயாரான நிலையில் அம்பாளின் பக்தர்கள் கடும் நெருப்பு கொண்ட குழியை தமது நேர்த்திகளை நிறைவேற்ற அருள்புரியுமாறு அம்பாளை வேண்டிபாடி  தீமிதித்து  சென்றனர் .

வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் காப்பு கட்டி விரதமிருந்த அடியார்களே தீமிதிப்புக்கு அனுமதி வழங்கபடுவது வழமையாகும் .

20150403_174453 20150403_174506 20150403_174546 20150403_174558 20150403_174632 20150403_174648 20150403_174718 20150403_174801 20150403_174828