வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம்மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் நேற்று (03/04/2015வெள்ளிகிழமைகிழமை ) இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிக்கு அபிசெகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.
தொடர்ந்து பங்குனி உத்தர தீமிதிப்பு உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்திலிருந்து கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கோவில் நோக்கி பாற்குட பவனி இடம்பெற்றது.
தொடர்ந்து எட்டு மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ஒன்பது மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
தொடர்ந்து தீர்த்த கரையில் அர்ச்சனை இடம்பெற்று இடபவாகனத்தில் வெளிவீதி உலாவந்து யாகம் கலைக்கப்பெற்று வழமையான பூசையுடன் பகல் உற்சவம் நிறைவு பெற்றது .
மீண்டும் மாலையில் திருஊஞ்சல் இடம்பெற்று பெற்று எட்டரை மணியளவில் கொடியிறக்கமும் இடம்பெற்று இரவு ஒன்பது மணியளவில்வெளி வீதிஉலா இடம்பெற்று உற்சவம் நிறைவு பெற்றது.