வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்எட்டாவது நாளான நேற்று முன்தினம் 02.04.2015 வியாழன் இரவு சப்பற திருவிழா இடம்பெற்றது .
மாலையில் யாகபூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை என்பன ஆலய பிரதம குருவும் மகோற்சவகுருவுமாகிய சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. அத்துடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்று இறுதியாக அம்பாள் அழகிய சப்பரத்தில் திருவீதி உலா வந்தாள்.