வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் 03.04.2015 வியாழன் காலையில் தேர்த் திருவிழா இடம்பெற்றது .
காலையில் கும்ப பூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை என்பன ஆலய பிரதம குருவும் மகோற்சவகுருவுமாகிய சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து அம்பாள் ஒன்பதுமணியளவில் தேரில் ஆரோகணித்து ஒன்பதரை மணியளவில் உலாவந்த நிகழ்வு இடம்பெற்றது .