பள்ளிவாசலுக்குச் சென்ற சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!!

570

Arrest

கல்­முனைப் பொலிஸ் பிரி­வி­லுள்ள கல்முனைக் கடற்­கரைப் பள்­ளி­வாசல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் சென்­றி­ருந்த சிறு­மி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோகம் செய்த இளைஞர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக கல்முனைப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 7 வய­தான இந்தச் சிறுமி சில தினங்களுக்கு முன் தனது பாட்­டி­யுடன் கல்­முனைக் கடற்­கரைப் பள்­ளி­வாசல் வரு­டாந்த நிகழ்­வு­களில் கலந்து கொள்­வ­தற்­காக சென்­றி­ருந்த சமயம் காணாமல் போயுள்ளார்.

உட­ன­டி­யாக அங்கு நின்­ற­வர்­களின் உத­வி­யுடன் சிறு­மியைத் தேடிய பொழுது கடற்­கரைப் பள்ளி சூழலில் மையத்துப் பிட்டி பஸ்கள் நிறுத்­து­மிட மறைவில் குறித்த சிறுமி இளை­ஞனால் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வதைக் கண்டு மக்கள் சிறு­மியைக் காப்­பாற்­றி­ய­தோடு சம்­பந்­தப்­பட நப­ரையும் பிடித்து பொலிஸில் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

சிறுமி தற்­ச­மயம் கல்­முனை அஷ்ரப் வைத்­திய சாலையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். கைது செய்­யப்­பட்ட வாழைச்­சேனை புகை­யி­ரத நிலைய வீதியைச் சேர்ந்த நபர் பொலி­ஸாரின் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

சிறு­மியின் தாய் சிறு­மியை பாட்­டியின் பொறுப்பில் விட்டு விட்டு மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.