கஹவத்தையில் தொடரும் மர்மக் கொலைகள் : விசாரணைகள் மீள ஆரம்பம்!!

690

Kahawatta

இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் 2011ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பங்கள் தொடர்பில் காவல்துறைக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொது அமைதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவங்களுடன் தொடர்புடையோரை அடையாளம் காண்பதே இதன் நோக்கம் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

வேறு பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் கஹவத்தை பகுதியில் திட்டமிட்டவகையில் பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கஹவத்தை கொட்டகெத்தன பகுதியில் நேற்றைய தினம் காணாமற்போன மூன்று பிள்ளைகளின் தயாரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கஹவத்தை பகுதியை அண்மித்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமைபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு தேடுதல் நடவடிக்கைக்கு இன்று கடற்படையினரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.