வவுனியாவில் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம் : விவசாயிகள் கவலை!!

514

Paddy

வவுனியாவிலுள்ள அரசாங்கத்தின் மூன்று நெல் களஞ்சியசாலைகளும் நிரம்பி வழிவதனால் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, வேப்பங்குளம் மற்றும் மாமடு பகுதிகளில் உள்ள மேற்படி மூன்று களஞ்சியசாலைகளும் முன்னறிவித்தல் எதுவுமின்றி இவ்வாறு நெல் கொள்வனவை இடைநிறுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தம்மிடமுள்ள நெல்லை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சித்திரை புத்தாண்டை கொண்டாட ஆவலாயுள்ள விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இன்றோ அல்லது நாளையோ தம்மிடமுள்ள நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.