புத்தாண்டை முன்னிட்டு வவுனியா – கொழும்பு இடையே விசேட ரயில் சேவை!!

507

Train

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கோட்டை – வவுனியா மற்றும் கொழும்பு கோட்டை –மட்டக்களப்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் கடுகதி ரயில் சேவைகளிலும் 2 ஆம் வகுப்பில் மேலுமொரு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு கோட்டை மற்றும் பதுளை இடையே கடுகதி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புத்தாண்டிற்காக சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் வசதிகருதியும், பாடசாலை விடுமுறைக் காலத்தில் சுற்றுலா செல்பவர்களின் நலன்கருதியும் இந்த விசேட ரயில் சேவை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் 19 ஆம் திகதிவரை இந்த விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.