இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் , இந்திய அணியின் தலைவர் தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகக் கிண்ண அணியில் யுவராஜ் சிங் உள்ளடக்கப்படாமைக்கு ஏற்கனவே தனது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டிருந்த அவர் மீண்டும் தோனியை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அவர் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு, “தோனி என்பவர் ஒன்றும் இல்லை, ஊடகங்களினாலேயே அவர் கிரிக்கெட் கடவுள் ஆகியுள்ளார். ஊடகங்களே அவருக்கு இந்த மகுடத்தை சூட்டியுள்ளன. எனினும் அவர் அதற்கு தகுதியற்றவர்.
அவர் ஒன்றும் இல்லாத ஒருவராக இருந்த நேரமொன்று இருந்தது ஆனால் இன்று அவர் ஊடகங்களின் முன் அமர்ந்து அவர்களை ஏமாற்றுகிறார். அவரை மிகைப்படுத்திக் காட்டிய ஊடகங்களையும் , அவர் ஓட்டங்களைப் பெறும் போது கைதட்டும் இந்திய மக்களையும் பார்த்து சிரிக்கிறார்.
உண்மையில் நானொரு ஊடகவியலாளனாக இருந்திருந்தால் அவரது கன்னத்தில் அறைந்திருப்பேன்.
தோனி , இராமாயணத்தில் வரும் இராவணனுக்கு ஒப்பானவர். அவர் அகங்காரம் பிடித்தவர். இராவணனின் இறுமாப்பு முடிவுக்கு வந்தது போது தோனியும் ஒருநாள் கஷ்டப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார் யோக்ராஜ்.
இதுமட்டுமன்றி தோனி ஒருநாள் பிச்சையெடுக்கும் நிலைக்கு செல்வார், அவரிடம் ஒரு பைசா கூட இருக்காது எனவும் எவ்வித உதவியும் அவருக்கு கிடைக்காது எனவும் தோனியை சபித்துள்ளார் யோக்ராஜ் சிங்.