வவுனியா இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாமன்றத்தின் “தமிழ் மாருதம் 2015” வரும் பன்னிரெண்டாம் திகதி (12.04) வவுனியா கலாசார மண்டபத்தில் காலை, மாலை எனும் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் இயல் விழா எனும் மிகப் பெரிய விழாவினை நடாத்தி வவுனியா மண்ணில் சரித்திரம் படைத்த தமிழ் மாமன்றம் இம்முறை, முத்தமிழினையும் பிரதிபலிக்கும் வகையில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பாடசாலை மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகளை அரங்கேற்றவுள்ளது.
“தமிழ் மாருதம் 2015” இற்கான ஊடக அனுசரணையை சக்தி வானொலி வழங்கவுள்ளனர். அனைவரையும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வவுனியா தமிழ் மாமன்றத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.
“தமிழால் வையகத் தலைமை கொள்வோம்”