ரயிலில் மோதுண்டு இளைஞர் பரிதாபமாக பலி!!

611

Accident

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு 22 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் -மாவடிவேம்பு பிரதேசத்தில் நேற்றிரவு 9.00 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பத்மநாதன் சதீஸ்வரன் என்ற இளைஞனே பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.