யாழில் தூய நீருக்கான உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்டது!!

494

யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் நேரடியாக சென்று திர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து இந்த உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுநரும், அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர்மாசடைதல் தொடர்பாக போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுக்குச் சாதகமான தீர்வொன்றினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனை அடுத்தே உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரைப்பருக வேண்டாம் என்றும், அறிக்கையை ஆராய்ந்து ஒரு கிழமைக்குள் முடிவை அறிவிப்பதாகவும், மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தூயநீருக்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் ஆளுநர் மற்றும், அரச அதிபர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கு முன்னர் இன்று வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரிடமிருந்து சாதகமான கடிதம் ஒன்று சற்றுமுன்னர் போராட்டக்காரர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் போராட்டக்காரர்கள் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எதுவும் கொடுக்கப்பட்டருக்கவில்லை என்றும், அதன் காரணமாக அந்தக் கடிதத்தைப் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

J1 J2 J3 J4