புதுவருட சுப நேரங்கள்!!

794

Newyear

வாக்கியப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் 14.04.2015 செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ஆம் பாதம், திகதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது.

திருக்கணிதப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் (14.04.2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2ஆம் பாதம், திகதி, அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது.

மருத்துநீர்

மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தலையில் கடப்பமிலையும், காலில் வேப்பமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்குப் புறமாகப் பார்த்து நின்று தேய்த்து அதன் பின்னர் ஸ்நானம் செய்தல் சிறப்புத்தரும்.

புண்ணியகாலம் – திருக்கணிதம்

சித்திரை மாதம் 01ஆம் நாள் (14.04.2015) செவ்வாய்க்கிழமை காலை 09.47 முதல் மாலை 05.57 வரை

வாக்கியம்

சித்திரை மாதம் 01ஆம் நாள் (14.04.2015) செவ்வாய்க்கிழமை காலை 08.23 முதல் மாலை 04.23 வரை,

கைவிசேடம்

15.04.2015 புதன்கிழமை சித்திரை மாதம் 02ஆம் நாள் காலை 07.52 தொடக்கம் 9.48 வரையும் 10.00 தொடக்கம்- 11.00 வரையும் சுபவேளையில் பெரியோர்களிடமிருந்து கைவிசேடங்களைப் பெற்று ஆசி பெறுதல் வேண்டும்.

தோஷ நட்சத்திரம்

சித்திரை, திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், ஆயிலியம், உத்திராடம்.