வவுனியா வைரவபுளியங்குளத்தில் பக்தர்களுக்கு அருளாட்சி புரிகின்ற ஆதி விநாயகரது வருடாந்த சித்திரை தேர்த்திருவிழா இன்றுகாலை (14.04.2015 செவ்வாய்க்கிழமை )இடம்பெற்றது . வருடாவருடம் சித்திரை தமிழ் வருடபிறப்பன்று வவுனியாவில் தேர்த்திருவிழா இவ்வாலயத்தில் இடம்பெறுவது வழக்கமாகும் .
அதிகாலையில் ஆரம்பமான அபிசேகங்களை தொடர்ந்து காலை எட்டுமணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பதரை மணியளவில் தேரில் ஆரோகணித்த வினாயகபெருமான் வெளிவீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
இதேவேளை வவுனியாவின் பல இடங்களிலும் இருந்து வருகைதந்த பக்கதர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியிருந்ததுடன் கற்பூரச்சட்டி மற்றும் அங்கப்பிரதட்சனை என்பன செய்து இறையருள் வேண்டியிருந்தனர்.
வவுனியா நெற் செய்திகளுக்காக வித்தகன்