அமெரிக்காவில் ஒரேசமயத்தில் 5 பெண் குழந்தைகளை கருத்தரித்து பிரசவித்த தாய் என்ற பெயரை ஹுஸ்டன் நகரைச் சேர்ந்த டானியல்லி என்ற பெண் பெறுகிறார். கடந்த வாரம் ஹுஸ்டன் பெண்கள் மருத்துவமனையில் பிரசவமான இந்தக் குழந்தைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பிறந்த குழந்தைகளுக்கு ஒலிவா மேரி, அவா லேன், ஹஸெல் கிரேஸ், பார்க்கர் கேட், றிலே பெய்ஜி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.டானியல்லிக்கும் அவரது கணவர் அடம் பஸ்பிக்கும் ஏற்கனவே பி.ளேக் என்ற 3 வயது மகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக பிறந்த 5 குழந்தைகளும் 4 நிமிட நேரத்தில் மருத்துவமனை சத்திரசிகிச்சைப் பிரிவில் பிரசவமாகியுள்ளன.மேற்படி குழந்தைப் பிரசவத்தில் 12 மருத்துவர்களைக் கொண்ட குழு பங்கேற் றிருந்தது.
கர்ப்பம் தரித்து 7 மாத காலத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில் விசேட பராமரிப்பு உபகரணத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
உலகில் தாயொருவருக்கு ஒரேசமயத்தில் 5 பெண் குழந்தைகள் கருத்தரித்து பிரசவமாவது 1969 ஆம் ஆண்டுக்குப் பின் இதுவே முதல் தடவையாகும்.