கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கைநூல் எதிர்வரும் மே மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்க உத்தேசித்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மாணவர்களுக்கு தேவையான புதிய பாடநெறிகள் மற்றும் ஏனைய பாடநெறிகள் தொடர்பான அனைத்து விபரங்களும் உள்ளடக்கப்பட்டு இந்த கைநூல் விநியோகிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.






